கோவையில் நகைப்பட்டறையில் ரூ. 31.80 லட்சம் மதிப்பிலான தங்கம் திருடிய ஊழியர்- போலிசார் விசாரணை...

published 1 year ago

கோவையில் நகைப்பட்டறையில் ரூ. 31.80 லட்சம் மதிப்பிலான தங்கம் திருடிய ஊழியர்- போலிசார் விசாரணை...

கோவை: கோவையில் நகைப்பட்டறையில் ரூ. 31.80 லட்சம் மதிப்பிலான தங்கம் திருடிய ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

கோவை கேசி தோட்டம் சாமி அய்யர் புது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(30). நகைப்பட்டறை உரிமையாளர். இவரது பட்டறையில் கடந்த 3 ஆண்டுகளாக சலீவன் வீதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வேலை முடிந்து பட்டறையை பூட்டிய லிங்கேஸ்வரன் சாவியை கார்த்திகேயனிடம் ஒப்படைக்காமல் இருந்தார். 

இதனால் சந்தேகமடைந்த கார்த்திகேயன் பட்டறைக்கு சென்று பார்த்த போது ரூ. 31.80 லட்சம் மதிப்பிலான 530 கிராம் தங்கத்தை திருடிக்கொண்டு லிங்கேஸ்வரன் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் இது குறித்து கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ரூ. 31.80 லட்சம் தங்கம் திருடியதாக நகைப்பட்டறை ஊழியர் லிங்கேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து லிங்கேஸ்வரனை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe