உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கம் இன்று திறக்கப்படுகிறது !

published 1 year ago

உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கம் இன்று திறக்கப்படுகிறது !

மதுரை: மதுரை மாவட்டத்தில் உலகின் முதல் ஜல்லிக்கட்டு மைதானத்தை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழர்களின் பாரம்பரிய கலையான ஜல்லிக்கட்டு போட்டி பல தடைகளையும் தாண்டி இன்று வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வீர விளையாட்டுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டுக்கென பிரத்தியேக புதிய அரங்கம் கட்ட திட்டமிடப்பட்டது.

அதன்படி, மதுரை மாவட்டம் கீழக்கரையில் ரூ.62.78 கோடியில் உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை காண முடியும். இந்த பிரம்மாண்ட அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். 

மேலும், இன்று ஜல்லிக்கட்டு போட்டியையும் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் வெற்று பெறும் வீரருக்கு எக்கச்சக்க பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், முதலமைச்சர் சார்பில் வெற்றி பெறும் காளை, மாடுபிடி வீரருக்கு மஹிந்திரா தார் வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe