75வது குடியரசு தினம்- தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்...

published 1 year ago

75வது குடியரசு தினம்- தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்...

கோவை: நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார். 

அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று  காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு குழந்தைகளுடன் இணைந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.

பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 208 அரசுத் துறை பணியாளர்கள் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். அதனை தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களும் காவல்துறை மரியாதையை ஏற்று கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe