கோவையில் கடன் தொல்லையால் ஆசிட்டை குடித்து நகைப்பட்டறை தொழிலாளி உயிரிழப்பு...

published 1 year ago

கோவையில் கடன் தொல்லையால் ஆசிட்டை குடித்து நகைப்பட்டறை தொழிலாளி உயிரிழப்பு...

கோவை: கோவையில் கடன் தொல்லையால் நகைப்பட்டறை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூரை சேர்ந்தவர் அஜித்குமார்(29). இவர் தனது மனைவி காயத்ரி(24) என்பவருடன் கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டில் வசித்து வந்தார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நகைப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அஜித்குமாருக்கு, ரூ. 1 லட்சம் கடன் இருந்ததாகவும், அதனை அவர் திருப்பி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். 

நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அஜித்குமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை குடித்து மயங்கி சரிந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe