விவசாயிகளுடன் பேரணி நடத்திய கோவை அமிர்தா கல்லூரி மாணவர்கள்!

published 1 year ago

விவசாயிகளுடன் பேரணி நடத்திய கோவை அமிர்தா கல்லூரி மாணவர்கள்!

கோவை: வேளாண் கழிவுகளின் மேலாண்மை முறை குறித்து அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

கோவையில் உள்ள அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் வேளாண் கழிவுகள் மற்றும் அவற்றை மேலாண்மை செய்யும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவத் திட்டத்தின் (RAWE) கீழ் குருநல்லிபாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். 

இதில் வேளாண் கழிவுகளின் மேலாண்மை முறைகள் குறித்தும், வேளாண் கழிவுகளை குறைப்பதற்காகவும் மறுசுழற்சி மற்றும் மீண்டும் விவசாய பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இப்பேரணியில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண் கழிவு மேம்பாடு குறித்து தெரிந்து கொண்டனர். 

கல்லூரி முதல்வர். சுதீஷ் மணலில், பேராசிரியர்கள் சுரேஷ்குமார், முருக ஸ்ரீதேவி, காமேஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe