நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் கோவை மண்டல மக்கள் நீதி மய்யம்- கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு...

published 1 year ago

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் கோவை மண்டல மக்கள் நீதி மய்யம்- கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு...

கோவை: கோவை மண்டல மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள மணி மஹாலில் நடைபெற்றது. மாநில செயலாளர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவர்கள் மௌரியா, தங்கவேலு, மயில்சாமி அனுஷா ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட வேண்டும், அதற்காக கட்சியினர் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மக்கள் நீதி மய்யத்தில் தலைவர் அறிவிக்கும் வேட்பாளருக்கு கட்சியினர் முழு ஆதரவை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில துணைத்தலைவர் மௌரியா  செய்தியாளரிடம் பேசுகையில்

கோவை மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ள தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தேர்தல் வழிமுறைகள் குறித்தும் தேர்தல் பணி குறித்தும் அதற்கான வழிமுறைகள் வகுக்கவும் கட்சியினருக்கு இந்த கூட்டத்தின் மூலம் அறிவுறுத்தி உள்ளோம், இந்த கூட்டத்தில் நாங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பாக கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து பாராளுமன்ற தொகுதியிலும் எவ்வாறு கட்சி பணி செய்ய வேண்டும், தேர்தல் பணியாற்ற வேண்டும் எவ்வாறு ஒன்றிணைந்து இந்த பணியை செய்ய வேண்டும் என  நுணுக்கமாக அறிவுரைகளை வழங்கியுள்ளோம்,  நிர்வாகிகள் மிகச் சிறப்பாக  பணியாற்றி வெற்றிக்காக உழைப்பார்கள்  எங்களுடைய மாவட்ட செயலாளர்கள்  ஒவ்வொரு மாவட்டத்திலும்  தேவையான பூத்  கமிட்டிகளை அமைப்பதற்காக பாடுபடுவார்கள் இன்னும் ஒரு சில இடங்களில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்,

தேர்தல் பணிக்கான வியூகத்தை வகுத்து கூறியுள்ளோம் அதன்படி செயல்பட்டு அவர்கள் வெற்றியை பரிசளிப்பார்கள்.

யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என  எந்த முடிவும் நாங்கள் செய்யவில்லை தலைவர் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்வார்.

கூட்டணியை பற்றி எந்த பேச்சுவார்த்தையும்  நடந்ததாக நடைபெறவில்லை, தலைவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார் எத்தனை தொகுதி என்பதை அவர்தான் முடிவு செய்வார், கூட்டணி உள்ளதா இல்லையா என்பதை கமலஹாசன் தான் அறிவிப்பார் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe