உங்களுக்கு இனி வாய்ப்பே இல்லை... நேருக்கு நேர் எதிர்க்கட்சிகளை விளாசிய மோடி!

published 2 months ago

உங்களுக்கு இனி வாய்ப்பே இல்லை... நேருக்கு நேர் எதிர்க்கட்சிகளை விளாசிய மோடி!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Di5OOIMCPha6vMceSju9G7

டெல்லி: இனி எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்றும் தேர்தலில் போட்டியிடும் சக்தி எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்றும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்னிலையில் உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.


இதில் பிரதமர் மோடி பேசியதாவது :

இனி எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை, தேர்தலில் போட்டியிடும் சக்தி எதிர்க்கட்சிகளிடம் இல்லை


எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரப் போகிறீர்கள். காங்கிரசின் செயல்பாடுகளால் அக்கட்சிக்கும், நாட்டிற்கும் இழப்பு. மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்துவதை நிறுத்துங்கள்; குடும்ப அரசியல் செய்வதால் மக்கள் பிரச்னைகள் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவதில்லை.

காங்கிரசின் முடிவு காலம் வந்துவிட்டது. அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதே அவர்கள் நோக்கம்.


உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்பது எனது உறுதி.

எதிர்க்கட்சி தலைவர்கள் நீண்ட நாள் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பார்கள். எதிர்க்கட்சி கூட்டணியின் தற்போதைய நிலைக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. அதை குடியரசுத் தலைவர் உரை பிரதிபலிக்கிறது


உலக நலனுக்கு இந்தியா பாடுபடுவதை ஜி20 மாநாட்டின் மூலம் உலகம் புரிந்து கொண்டது. விரைவில் 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்பது எனது உறுதி.

ஒரே முகத்தை முன்னிறுத்துவதால், காங்கிரசை இழுத்து மூடும் நிலை உள்ளது. குடும்ப அரசியல் செய்வதால் அவர்களுக்கு மக்கள் பிரச்சினை தெரியவில்லை. 




நாடு முழுவதும் 4.8 கோடி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளோம். 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம். சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் திட்டம்.

நாட்டின் எல்லைப்பகுதி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றுள்ளன. மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும். அடுத்த 1000 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அஸ்திவாரம் இடப்படும்.


காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற இன்னும் 3 தலைமுறைகள் தேவைப்படும். காங்கிரஸ் கட்சியின் ஆமை வேகத்திற்கு எந்த போட்டியும் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜன நாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும்.


இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw