கோவையில் இன்ஜினியர் வீட்டில் நகை திருட்டு…

published 1 year ago

கோவையில் இன்ஜினியர் வீட்டில் நகை திருட்டு…

கோவை: கோவை துடியலூர் ஜிஎன் மில் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(48). சிவில் இன்ஜினியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு நல்லாம்பாளையத்தில் உள்ள தனது தாயாரை பார்க்க சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. 

உள்ளே சென்று பார்த்த போது கப்போர்டில் இருந்த 2 1/2 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe