கோவையில் மது அருந்த பணம் தராத சகோதரியை தாக்கிய தொழிலாளி...

published 1 year ago

கோவையில் மது அருந்த பணம் தராத சகோதரியை தாக்கிய தொழிலாளி...

கோவை: கோவையில் மது குடிக்க பணம் தர மறுத்ததால் சகோதரியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவைப்புதூர் தொட்டராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபு (36). கட்டிட தொழிலாளி. இவர் அடிக்கடி குடிபோதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு பிரபு சென்றார். பின்னர் அங்கிருந்த அவரது சகோதரி மற்றும் தாயிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். 

இதற்கு அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பிரபு தகாத வார்த்தைகளால் பேசி தனது சகோதரியை தாக்கினார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் பிரபுவின் சகோதரி அளித்த புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், வழக்குப்பதிந்து பிரபுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe