விதை மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

published 1 year ago

விதை மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

கோவை: விதை மேலாண்மை, விவசாய வணிக யோசனைகள் மற்றும் திட்டங்களைக் குறித்து விவசாயிகள் மத்தியில் கோவை அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்களின் ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவத் திட்டத்தின் (RAWE) கீழ்  வடசித்தூர் மற்றும் குருநெல்லிபாளையம் ஊராட்சி மாணவர்கள் வடசித்தூரில் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதன் பகுதியாக விதை சிகிச்சை மற்றும் விதை உருண்டையாக்குதல் மூலம் ஏற்படும் நன்மைகளை செய்முறையாக விளக்கினர். அதன் பிறகு மத்திய , மாநில அரசு வழங்கும் விவசாய திட்டங்கள் மற்றும் விவசாய வணிக யோசனைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், வாழையில் இருந்து தயாரிக்க கூடிய உணவுகளை பற்றியும், அதன் செயல்முறை பற்றியும் விவரித்தனர்.
இந்நிகழ்வில் வடசித்தூர் மற்றும் குருநெல்லிபாளையம் விவசாயிகள்  பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர். சுதீஷ் மணலில், பேராசிரியர்கள் பிரியா சுரேஷ்குமார், பார்த்தசாரதி, காமேஷ் கிருஷ்ணமூர்த்தி, முருகஸ்ரீதேவி, மற்றும் மகேசன் ஆகியோரின் வழிக்காட்டுதலின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe