கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்...

published 1 year ago

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்...

கோவை: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நாடகங்கள், கையெழுத்து இயக்கம்,  உறுதிமொழி ஏற்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ராமகிருஷ்ணா (தனியார்) கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கோவை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நாடகங்கள் மேற்கொள்வதற்கு புறப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் கொத்தடிமை முறை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe