பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு- பேனர் வைத்த கோவை சிவாஜி காலனி மக்கள்...

published 1 year ago

பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு- பேனர் வைத்த கோவை சிவாஜி காலனி மக்கள்...

கோவை: கோவை தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதி மக்கள்,  அரசாங்கம் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என கூறி இந்த பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக சாலையோரம் பேனர் வைத்துள்ளனர்.

இது குறித்து சிவாஜி காலனி விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில், "சிவாஜி காலனி பகுதிகளில் செளடாம்பிகா நகர், சிம்சன் நகர், பல வருடங்களாக ரோடு போட்டுத் தரவில்லை. சாக்கடை வசதியும் இல்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இன்றுவரை ரோடு மற்றும் சாக்கடை வசதி செய்து தரவில்லை. ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம். யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் என உறுதி கூறுகிறோம்." என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பேனர் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையின் நிறுவனத் தலைவரான வழக்கறிஞர் புஸ்பானந்தம், மற்றும் சிவாஜிகாலனி விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் நடராஜன் ஆகியோரால் வைக்கப்பட்டுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe