கோவையில் மக்களிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு.. மூவர் கைது!

published 1 year ago

கோவையில் மக்களிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு.. மூவர் கைது!

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் கத்தி முனையில் மிரட்டி 3 பேரிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வேலு(49). இவர் கோவையில் தங்கி பேரூர் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் சேல்மேனாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இவர் தெலுங்குபாளையம் பாரதி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி வேலுவிடம் இருந்த ரூ. 1650 ஐ பறித்து கொண்டு தப்பினார்.

இது குறித்து வேலு செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்தது குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்த நிஷாருதீன்(32) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி ஜவஹர் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(49). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 500 ஐ பறித்து சென்றார். புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து டாடாபாத் சாஸ்திரி நகரை சேர்ந்த ஜோஷ்வா தேவபிரியனை(23) கைது செய்தனர்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(26). இவர் கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் தள்ளுவண்டியில் திண்பண்டங்கள் விற்று வருகிறார். நேற்று அவர் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அவரை கத்தி முனையில் மிரட்டிய வாலிபர் ஒருவர் அவரிடம் இருந்த ரூ. 200 ஐ பறித்து சென்றார். புகாரின்பேரில், காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த கணபதி காமராஜபுரத்தை சேர்ந்த கவுரிசங்கர்(24) என்பவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe