கோவையில் தங்கம் என நினைத்து கவரிங் நகையை பறிக்க முயன்ற வாலிபர்...

published 1 year ago

கோவையில் தங்கம் என நினைத்து கவரிங் நகையை பறிக்க முயன்ற வாலிபர்...

கோவை: கோவையில் தங்கம் என நினைத்து பெண்ணிடம் கவரிங் செயினை பறிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் கலா(40). டெய்லர். இவர் நேற்று காந்திபுரம் 5வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கலா கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார். ஆனால் செயினை பறிக்கவிடாமல் கலா பிடித்துக் கொண்டு கூச்சல் போட்டார். 

அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்து அந்த வாலிபர் செயின் பறிப்பு முயற்சியை கைவிட்டு தப்பினார். இது குறித்து கலா ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், கலா அணிந்திருந்தது கவரிங் செயின் என்றும், அந்த வாலிபர் தங்கம் என நினைத்து பறிக்க முயன்றதும் தெரியவந்தது. போலீசார் செயின் பறிக்க முயன்ற அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe