சிங்காநல்லூரில் உதவி செய்தவருக்கே ஆப்பு.. செல்போனை எடுத்துக்கொண்டு ஓட்டம்!

published 11 months ago

சிங்காநல்லூரில் உதவி செய்தவருக்கே ஆப்பு.. செல்போனை எடுத்துக்கொண்டு ஓட்டம்!

கோவை: மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கலைவாணன்(42). இவர் கோவையில் தங்கி டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று கலைவாணன் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கலைவாணனிடம் நான் அவசராக பேச வேண்டும், என கூறி செல்போன் கேட்டார்.

இதனை நம்பிய கலைவாணன் தனது செல்போனை அந்த வாலிபரிடம் கொடுத்தார். அப்போது அந்த வாலிபர் செல்போன் பேசுவது நடித்து திடீரென செல்போனுடன் தப்ப முயன்றார். இதனை பார்த்து கலைவாணன் சத்தம் போட்டார்.

பின்னர் அக்கம்பக்த்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் செல்போனுடன் தப்ப முயன்றது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த புரோட்டா மாஸ்டர் பிரகாஷ் ராஜ்(20) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe