ரத்தினபுரியில் மணிபர்சை திருடிய வாலிபர் கைது

published 11 months ago

ரத்தினபுரியில் மணிபர்சை திருடிய வாலிபர் கைது

கோவை: கோவை ரத்தினபுரி நால்வர் லே-அவுட்டை சேர்ந்தவர் ஜெயராஜ்(37). இவர் நேற்று விகேகே மேனன் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே தனது நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அவர்களது அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவர் நைசாக ஜெயராஜின் மணிபர்சை திருடி கொண்டு தப்ப முயன்றார்.

உடனே சுதாரித்த ஜெயராஜ் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மணிபர்சை திருடியது நியூசித்தாபுதூரை சேர்ந்த தொழிலாளி கண்ணன்(24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe