கோவையில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வந்தவர்க்கு மீண்டும் சிறை!

published 11 months ago

கோவையில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வந்தவர்க்கு மீண்டும் சிறை!

கோவை: கோவையில் குடிபோதை தகராறில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

கோவை மருதமலை அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(56). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகேஷ்(50). இவர் அடிக்கடி குடிபோதையில் அப்பகுதி வாசிகளிடம் பிரச்னையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த மகேஷ், ஜெயச்சந்திரனிடம் தகராறு செய்தார். இது குறித்து ஜெயச்சந்திரன் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் மகேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மகேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.

தான் சிறை சென்றதற்கு காரணமாக இருந்ததாக ஜெயச்சந்திரன் மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று ஜெயச்சந்திரன் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த மகேஷ் தகாத வார்த்தைகளால் பேசி ஜெயச்சந்திரனை மிரட்டினார். இது குறித்து ஜெயச்சந்திரன் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe