கோவையில் கண் மருத்துவமனைக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் பேருந்தில் நகை திருட்டு...

published 11 months ago

கோவையில் கண் மருத்துவமனைக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் பேருந்தில் நகை திருட்டு...

கோவை:கோவை பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தனராஜ் மனைவி மகாலட்சுமி(53). இவர் சம்பவத்தன்று அரசு பஸ்சில் பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சென்றார். 

பின்னர் அங்கிருந்து பேருந்தில் வீடு திரும்பினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 6.5 பவுன் தங்க செயினை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் திருடி சென்றுள்ளார். 

இது குறித்து மகாலட்சுமி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe