கோவையில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து பொருட்கள் திருட்டு...

published 11 months ago

கோவையில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து பொருட்கள் திருட்டு...

கோவை: கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் பாபு ஜனார்த்தனன்(71). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கடைவீதிக்கு சென்றார். அப்போது அவர் சாவியை வீட்டுக்கு வெளியே செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் அருகே மறைத்து வைத்துள்ளார். 

பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு அலமாரியில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கு வைத்திருந்த 3.5 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 70 ஆயிரம் காணவில்லை. சாவியை தேடி எடுத்து மர்ம நபர் திருடி சென்றுள்ளார். 

இது குறித்து பாபு ஜனார்த்தனன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe