கோவையில் இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த நபரால் பரபரப்பு

published 11 months ago

கோவையில் இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த நபரால் பரபரப்பு

கோவை: குனியமுத்தூரில் இளம் பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த நபரல் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே வசிக்கும் ராஜேஷ் இளம்பெண் குளிப்பதை குளியலறையின் மேல்புற இடைவெளி வழியாக எட்டி பார்த்தார்.

இதனை பார்த்த அந்த பெண்ணின் தங்கை கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அந்த இளம்பெண் குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். இருவரையும் அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து தப்பி ஓடினார்.

இது குறித்து அந்த இளம்பெண் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe