இலங்கை அரசை கண்டிக்க மாட்டீர்களா? கோவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.!

published 11 months ago

இலங்கை அரசை கண்டிக்க மாட்டீர்களா? கோவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.!

கோவை: தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை சீர்க்குலைக்கும் இலங்கையை மத்திய அரசு கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களுக்கு இலங்கை அரசு ஆறு மாத சிறை தண்டனை வழங்கியதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள BSNL அலுவலகம் முன்பு கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் பங்கேற்றனர். 

மத்திய அரசை கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தமிழக மீனவர்கள் நலன் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe