கோவையில் குவிந்த துணை ராணுவப்படை.!

published 11 months ago

கோவையில் குவிந்த துணை ராணுவப்படை.!

கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிளுக்காக கோவை இரயில் நிலையம் வந்தடைந்த துணை இராணுவத்தினரை கோவை மாநகர தேர்தல் பிரிவு காவல்துறையினர் வரவேற்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் பொதுக்கூட்டம் என பணிகளை துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக கேரளாவில் இருந்து கோவை, திருப்பூர், மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளுக்கு 3 கம்பெனி துணை இராணுவத்தினர் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கேரளாவில் இருந்து  ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்தடைந்த 276 துணை இராணுவ வீரர்களை கோவை மாநகர தேர்தல் பிரிவு போலீஸார் வரவேற்றனர்.

பின்னர் காவல் துறை பேருந்துகள் மூலம் துணை இராணுவத்தினர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe