கோவையில் ஆன்லைன் வேலை என கூறி ரூ. 19.75 லட்சம் நூதன மோசடி…

published 11 months ago

கோவையில் ஆன்லைன் வேலை என கூறி ரூ. 19.75 லட்சம் நூதன மோசடி…

கோவை: கோவை ஜி.என்.மில்ஸ் சேரன் நகரை சேர்ந்தவர் ஜெமினி (47). இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் எண்ணில் பகுதி நேர வேலை உள்ளதாக குறுஞ்செய்தி வந்தது.

இதையடுத்து அவர் அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு கேட்டபோது, எதிர் முனையில் பேசிய நபர் எங்களிடம் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக கமிஷன் கிடைக்கும் என கூறினார்.

 

இதனை நம்பிய அவர் சிறிது, சிறிதாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ. 19.75 லட்சம் முதலீடு செய்தார். தொடர்ந்து அவர்கள் கொடுக்கும் ஆன்லைன் பணிகளை செய்து முடித்தார்.

ஆனால் அவருக்கு எந்தவிதமான கமிஷன் தொகையும் கிடைக்கவில்லை. அந்த நபரை மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது ரூ. 5,46,725 ஐ வரியாக செலுத்தினால் மட்டுமே நீங்கள் செய்த முதலீட்டு தொகை மற்றும் கமிஷனை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த ஜெமினி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe