பாஜகவினர் வாழைப்பழம் கொடுத்து கோவையில் நூதன பிரச்சாரம்...

published 11 months ago

பாஜகவினர் வாழைப்பழம் கொடுத்து கோவையில் நூதன பிரச்சாரம்...

கோவை: திமுகவினர் மோடி வடை என்ற நூதன பிரச்சாரம் நடத்தியது போல் பாஜகவினர் வாழைப்பழம் கொடுத்து கோவையில் நூதன பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 

பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் வாயிலேயே வடை சுடுகிறார் எனவும் கூறி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் உளுந்து வடை வழங்கி மோடி சுட்ட வடை என்ற நூதன பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.  

இந்நிலையில் பாஜக சார்பில் திமுக விற்கு பதிலளிக்கும் வகையில் வாழைப்பழம் கொடுக்கும் நூதன பிரச்சார நடைபெற்றது.  சிவானந்தா காலனி பகுதியில் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கையில் வாழைப்பழத்துடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகமூடியுடனும் திரண்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

அப்போது திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொது மக்களை ஏமாற்றி விட்டதாகவும், பொதுமக்களுக்கு வாழைபழத்தை கொடுத்து விட்டதாகவும்  தெரிவித்தனர்.

ஆனால் போலீசார் வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுத்ததால் கொண்டு வந்திருந்த பழங்களை மக்கள் சார்பில் அவர்களே சாப்பிட்டு கொள்வதாக கூறி கலைந்து சென்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe