கோவையில் நகைப்பட்டறையில் திருடியவர் மனைவியுடன் கைது!

published 11 months ago

கோவையில் நகைப்பட்டறையில் திருடியவர் மனைவியுடன் கைது!

கோவை: கோவையில் நகைப்பட்டறையில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான தங்கம் திருடிய நகைப்பட்டறை ஊழியர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் மேலூர் சித்தாம்பட்டியை சேர்ந்தவர் ராஜா(40). இவரது மனைவி உமா(27). இவர்கள் கோவை வடமதுரை பகுதியில் தங்கி இருந்தனர். ராஜா ஆர்எஸ்புரம் டிபி ரோட்டில் உள்ள பழனிக்குமார்(38) என்பவருக்கு சொந்தமான நகைப்பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி பட்டறையில் இருந்த சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்கத்தை காணவில்லை. திருடு போன அன்று வேலைக்கு வந்த ராஜா அதன் பின்பு வேலைக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பழனிக்குமார், ஊழியர் ராஜாவை தேடினார்.

ஆனால் அவர் தனது மனைவியுடன் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பழனிகுமார் இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், தங்கத்தை ராஜா திருடியது தெரியவந்தது. அவரை தேடி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து ரூ. 40 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்கம் திருடிய ராஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உமா ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe