கோவையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களை மீட்கும் போலீசார்

published 2 years ago

கோவையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களை மீட்கும் போலீசார்

கோவை: கோவையில் சாலையோரங்களில் வசித்து வரும் ஆதரவற்றவர்களை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் சிக்னல்களில் பெண்கள் மற்று முதியவர்கள் கைக்குழந்தைகளுடன் வந்து யாசகம் பெற்று வருகின்றனர். இதனால் சில நேரங்களில் சிக்னல்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதில் சிலர் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்தது. 

இதனைத் தடுக்க கோவை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது சிக்னல்களில் யாசகம் பெறுபவர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோரை மீட்டனர். இன்று ஒரே நாளில் சுமார் 20 பேரை மீட்ட போலீசார் அவர்களை கோவையில் உள்ள காப்பகங்களில் சேர்த்தனர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சிக்னல்களில் யாசகம் பெறுபவர்களையும், சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களையும் மீட்க மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி இன்று மாநகரப் பகுதிகளில் ரோந்து சென்றோம். தற்போது வரை  20 பேர் வரை மீட்டுள்ளோம். தொடர்ந்து மாநகரம் முழுவதும் ரோந்து சென்று ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்க உள்ளோம்." என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe