கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் மீது பாய்ந்த குண்டர் தடுப்பு சட்டம்- இந்த வருடம் இது நாள் வரை எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என தெரிவிப்பு...

published 10 months ago

கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் மீது பாய்ந்த குண்டர் தடுப்பு சட்டம்- இந்த வருடம் இது நாள் வரை எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என தெரிவிப்பு...

கோவை: கோவை மாவட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  தொடர்  திருட்டு வழக்கில்   ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த  ராமச்சந்திரன் (38) என்பவரை  காவல்துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, அந்த நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்...

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

உத்தரவின்படி திருட்டு வழக்கில் குற்றவாளியான ராமச்சந்திரனை   குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 17 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe