மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் 100% வாக்களிக்க வேண்டும்- கோவையில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு...

published 10 months ago

மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் 100% வாக்களிக்க வேண்டும்- கோவையில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு...

கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை எட்டும் வகையில் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையம் இணைந்து நூறு சதவிகித வாக்கு பதிவினை எட்டும் வகையில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாநகர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய அனைத்து பகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ மற்றும் பேருந்துகளில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe