கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான முருகன் சிலை உடைப்பு!

published 10 months ago

கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான முருகன் சிலை உடைப்பு!

கோவை: கோவை காந்திபுரம் சோம சுந்தரம் மில் ரோட்டில் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு ஒரு சிறிய முருகன் கல் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதனை அந்த பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் விஷேச நாட்களில் இங்கு சிறப்பு பூஜையும் நடைபெறும். இந்நிலையில், நேற்று முருகன் சிலையை மர்ம நபர்கள் யாரோ உடைத்து சென்றுள்ளனர்.

இதனை பார்த்த அங்கு சென்ற பக்தர்கள் இது குறித்து உடனே காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடைக்கப்பட்ட கல் சிலையை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி முருகன் சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe