கோவை திமுக வேட்பாளருக்கு கிரேனில் மாலை அணிவிப்பு, புல்லட்டில் வாக்கு சேகரிக்கும் பெண் தொண்டர்...

published 10 months ago

கோவை திமுக வேட்பாளருக்கு கிரேனில் மாலை அணிவிப்பு, புல்லட்டில் வாக்கு சேகரிக்கும் பெண் தொண்டர்...

கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் காமராஜபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார். 

அப்போது, மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகுடபதி, இளைஞரணி அஸ்வின் ஆகியோர் இணைந்து 18 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட மாலையை, கிரேன் உதவியுடன் வேட்பாளர் 
கணபதி ராஜ்குமாருக்கு அணிவித்தனர். அப்போது பொதுமக்கள் பேப்பர் ஸ்பெரே அடித்தும் வரவேற்றனர்.

தொடர்ந்து அங்கு பேசிய வேட்பாளர்;
பெண்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற சலுகைகள் மட்டும் அல்ல, பாதுகாப்பான, சுதந்திரமான அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்கின்றது. பாஜக தமிழகத்தை வஞ்சிக்கின்றது என குற்றம் சாட்டியவர், திமுகவிற்கு வாக்களிக்க பொதுமக்கள் தயாராக உள்ளனர் எனக்கூறினார்.

வாக்குசேகரிப்பின் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அண்ணம்மாள் புல்லட் ஓட்டி சென்று வாக்கு சேகரித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe