விஜயை, புஸ்ஸி ஆனந்த் ஏமாற்றுகிறார்!; எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றச்சாட்டு!

published 10 months ago

விஜயை, புஸ்ஸி ஆனந்த் ஏமாற்றுகிறார்!; எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றச்சாட்டு!

சென்னை: புஸ்ஸி ஆனந்த கடுமையாக உழைப்பது போன்று விஜயை நம்ப வைத்து ஏமாற்றி வருவதாக விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அந்த கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் காண உள்ளதாக விஜய் அறிவித்தார். 

இது விஜய ரசிகர்களை குஷிப்படுத்தியது. ரசிகர்கள் கட்சித் தொண்டர்களாக மாறி களப்பணியாற்றத் தொடங்கியுள்ளனர். கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய 'ஆப்' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 'ஆப்' மூலமாக லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளதாகவும், 2 கோடி பேரை சேர்ப்போம் எனவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் அரசியல் கட்சியின் பொதுச்செயலாளராக அவரது ரசிகர் புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது மகனை ஏமாற்றுவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "புஸ்ஸி ஆனந்த் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவர் கட்சிக்காக கஷ்டப்படுவது போன்ற வீடியோக்களை பதிவேற்றுகிறார். இதனை பலரும் 'லைக்' செய்கின்றனர். இதனை பார்க்கும் விதை, புஸ்ஸி ஆனந்த் கடுமையாக உழைப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார். விஜயை ஏமாற்றுகின்றனர்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe