மழைநீரை அகற்ற தயார் நிலையில் சூப்பர் சக்கர் வாகனம் அதிகாரி தகவல்

published 2 years ago

மழைநீரை அகற்ற தயார் நிலையில் சூப்பர் சக்கர் வாகனம் அதிகாரி தகவல்

கோவை, ஜூலை 16: கோவை மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறிந்து மழைநீரை அகற்ற சூப்பர் சக்கர் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளைச் சரி செய்வதற்கும், கழிவுகளைத் தூர்வாருவதற்கும் அதிக திறன் கொண்ட கழிவுநீர் உந்து மற்றும் அடைப்புகளைச் சரி செய்யும் சூப்பர் சக்கர் வாகனம் கோவை மாநகராட்சிக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது. இந்த வாகனம் அதிக நீரேற்று திறன் கொண்ட பம்பு அதாவது மணிக்கு 85 ஆயிரம் லிட்டர் உறிஞ்சும் திறன் கொண்டது. இவ்வாகனம் கழிவு நீரை மறுசுழற்சி செய்து திரும்ப உபயோகிக்கும் அமைப்பினை கொண்டுள்ளது. மழைக்காலத்தில் சாலைகள், சந்திப்புகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளைக் கோவை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சியில் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு அண்மையில் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் தூர்வாரப்பட்டன. தற்போது மழை பெய்யும்போது அதிக அளவில் மழை நீர் தேங்கும் இடங்களில் உடனடியாக தேவைக்காக மழைநீரை அகற்ற சூப்பர் சக்கர் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe