கோவையில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு…

published 10 months ago

கோவையில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு…

கோவை: பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் மயிலாத்தாள் (65). இவர் கோவையில் வசிக்கும் தனது பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக நேற்று பஸ்சில் கோவை வந்தார். 

பின்னர் உக்கடம் பஸ் நிலையத்தில் இறங்கி கவுண்டம்பாளையம் பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்று விட்டார். 

நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி மயிலாத்தாள் இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe