முதலீடு செய்தால் லாபம்; முதலீட்டாளர் தலையில் மிளகாய் அரைத்த நிறுவனம்!

published 10 months ago

முதலீடு செய்தால் லாபம்; முதலீட்டாளர் தலையில் மிளகாய் அரைத்த நிறுவனம்!

கோவை: கோவையில் ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி ஆடிட்டரிடம் ரூ. 51 லட்சம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(28). ஆடிட்டர். இவர் திருச்சி ரோடு சுங்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் கடந்த 2022ம் ஆண்டு வங்கியின் துணை மேலாளர் ஜெகன் என்பவரை வீட்டு லோன் பெறுவதற்காக சந்தித்தார். அதன்பின்பு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அப்போது ஜெகன் ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மை என நம்பிய ஹரிகிருஷ்ணன், ஜெகன் கேட்டுக்கொண்டதின்பேரில், ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த ஜனார்த்தனன், மற்றொரு ஹரிகிருஷ்ணன், ஸ்ரீராம் மற்றும் கென்னடி ஆகியோரின் வங்கி கணக்கில் பல்வேறு கட்டங்களாக ரூ. 56 லட்சம் செலுத்தியதாக தெரிகிறது.

தொடர்ந்து 4 பேரும் லாப தொகை ரூ.4.85 லட்சம் கொடுத்தனர். அதன்பின்பு எந்த விதமான லாபத்தையும் அவர்கள் கொடுக்கவில்லை. ரூ. 51.15 லட்சத்தை மோசடி செய்து விட்டனர்.

இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வங்கி துணை மேலாளர் ஜெகன், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஜனார்த்தனன், ஹரிகிருஷ்ணன், ஸ்ரீராம், கென்னடி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe