கோவையில் பையை பறித்து சென்ற வாலிபர் கைது…

published 10 months ago

கோவையில் பையை பறித்து சென்ற வாலிபர் கைது…

கோவை: தஞ்சாவூர் மாவட்டம் வடகரை வயல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 27, டிரைவர்; இவர் நேற்று முன்தினம் கோவை காந்தி பார்க் அருகே தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக நின்றிருந்தார். 

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரது பையை பறித்து தப்பி ஓடினார். பையில் இரண்டு மொபைல் போன்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. இதுகுறித்து சரவணன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் பையை பறித்து சென்றது தடாகம் ரோடு பொன்னையா ராஜபுரத்தை சேர்ந்த லட்சுமணன், 20, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe