கோவையில் பெயிண்டர் மீது தாக்குதல்- வாலிபர் கைது…

published 2 weeks ago

கோவையில் பெயிண்டர் மீது தாக்குதல்- வாலிபர் கைது…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CQ78cBq2Gn00cQtG7fXjDn

கோவை: கோவை வடவள்ளி ஜெயா நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(34). பெயிண்டர். இவர் நேற்று வடவள்ளி மருதமலை ரோட்டில் சிப்ஸ் கடை அருகே நின்றிருந்தார். அங்கு அவருக்கு ஏற்கனவே தெரிந்த வடவள்ளியை சேர்ந்த் டெய்லர் சுரேஷ்குமார்(42) என்பவர் வந்தார். 

அவர் சீனிவாசனிடம் கடையில் உணவு வாங்கி தருமாறு கேட்டதாகவும், அதற்கு அவர் கொடுக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் தகாத வார்த்தைகளால் பேசி சீனிவாசனை தாக்கினார். 


இது குறித்த புகாரின்பேரில், வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw