கோவையில் மிதிவண்டி பாதை அமைக்க முதல்கட்டமாக 12 இடங்கள் தேர்வு

published 2 years ago

கோவையில் மிதிவண்டி பாதை அமைக்க முதல்கட்டமாக 12 இடங்கள் தேர்வு

மாநகராட்சி சாலைகளில் மிதிவண்டி பாதை அமைக்க முதல்கட்டமாக 12 இடங்கள் தேர்வு

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் முதல்கட்டமாக 12 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டி பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 ஜெர்மனி நாட்டின் தன்னார்வ அமைப்புடன் மத்திய அரசு இணைந்து இந்தியாவில் ஒடிசா,கொச்சின், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை கிராஸ்கட் சாலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சோதனை ஒட்டமாக 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி செல்வதற்காக பிரத்யேக பாதை மற்றும் நடைபாதைகளில் மக்கள் செல்வதற்காக வண்ண நடைபாதை, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவை அமைக்கப்பட்டன.

இந்த பாதைகள் சோதனை ஒட்டமாக 10 நாள்களுக்கு மக்கள் பயன்படுத்தினர். இதனிடையே மாநகராட்சி சார்பில் நிரந்தரமாக இப்பாதைகள் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ முதல் கட்டமாக கோவை மாநகரில் நெரிசல் நிறைந்த பெரியகடை வீதி, ராஜவீதி, வடவள்ளி, துடியலூர்,சாய்பாபா காலனி போன்ற 12 இடங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன எனவும் விரைவில் இதற்கான ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்படும்,’’ என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe