கோவையில் பெண்ணை தாக்கிய தந்தை, மகன் கைது…

published 1 week ago

கோவையில் பெண்ணை தாக்கிய தந்தை, மகன் கைது…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

கோவை: கோவை சிங்காநல்லுாரை அடுத்த பசும்பொன் நகரை சேர்ந்தவர் நிர்மலா, 49; அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இந்நிலையில் இருவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் ஆறுச்சாமி மனைவிக்கும், நிர்மலாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது அங்கு வந்த ஆறுச்சாமி மற்றும் அவரது மகன் பாலதண்டபானி ஆகியோர் நிர்மலாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் அவரை தாக்கி தள்ளி விட்டனர். அதில் அவரது கை முறிந்தது. அவரை அருகில் அருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 


நிர்மலா புகாரின் படி சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து ஆறுச்சாமி, 55, அவரது மகன் பாலதண்டபானி, 26 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw