கோவையில் சிறை கைதி சாவு…

published 9 months ago

கோவையில் சிறை கைதி சாவு…

கோவை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கசாமி(82). இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி 7ம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கினார். சிறை மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறை கைதிகளுக்கான வார்டில் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe