கோவையில் சிறை கைதி சாவு…

published 2 weeks ago

கோவையில் சிறை கைதி சாவு…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரங்கசாமி(82). இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி 7ம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கினார். சிறை மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். 


பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறை கைதிகளுக்கான வார்டில் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw