கோவையில் டிரைவரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு…

published 9 months ago

கோவையில் டிரைவரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு…

கோவை: கோவை சுந்தராபுரம் சிட்கோ நாகராஜபுரத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன்(31). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பிள்ளையார்புரம் காந்தி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவருக்கு ஏற்கனவே தெரிந்த 3 பேர் அவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் 3 பேரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளி தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பினர். தாக்கியதில் காயமடைந்த ஜாகீர் உசேன் மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

இந்த சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஜாகீர் உசேனை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த ரீகன் உள்ளிட்ட 3 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe