கோவையில் செல்போன் டவரில் இருந்து விழுந்து ஊழியர் பலி- ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு…

published 9 months ago

கோவையில் செல்போன் டவரில் இருந்து விழுந்து ஊழியர் பலி-  ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு…

கோவை: செல்போன் டவரில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பலியான சம்பவத்தில் ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் கோவையில் தங்கியிருந்து செல்போன் டவர் பராமரிப்பு பணி ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று கார்த்திக் ஆர்.எஸ்.புரம் சர்.சி.வி ரோடு ஜங்ஷனில் உள்ள செல்போன் டவரில் ஏறி பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி 15 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கார்த்திக்கை பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுதொடர்பாக செல்போன் டவர் ஒப்பந்ததாரர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த வேலுசாமி (60) என்பவர் மீது போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஊழியரை பணிக்கு அமர்த்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe