மதுக்கரை பகுதியில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்- இருவர் கைது...

published 9 months ago

மதுக்கரை பகுதியில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்- இருவர்  கைது...

கோவை: மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை காவல்துறையினர் கற்பகம் கல்லூரி சந்திப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது  கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த குறிச்சி பகுதியை சேர்ந்த  ராஜேந்திர பிரசாத் (59) மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த  சிவாஜி (49) ஆகியோர்களை கைது  செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூபாய் 1,10,000/- மதிப்புள்ள  11 கிலோ  கஞ்சாவை  பறிமுதல் செய்த போலிசார் அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe