குனியமுத்தூரில் வழிப்பறி: 3 பேர் கைது

published 1 week ago

குனியமுத்தூரில் வழிப்பறி: 3 பேர் கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: கோவை குனியமுத்தூர் திருநகர் காலனியை சேர்ந்தவர் தேவராஜ்(52).

இவர் நேற்று குனியமுத்தூர் ரைஸ்மில் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் தாங்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் குத்திவிடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த ரூ.800ஐ பறித்து தப்பி சென்றனர்.


இது குறித்து தேவராஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், மிரட்டி பணம் பறித்தது குனியமுத்தூர் திருநகர் காலனியை சேர்ந்த சுஜித்(33), சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்த ஹக்கீம்(36), கோவைப்புதூரை சேர்ந்த மதிவண்ணன்(30) என்பது தெரியவந்தது.


போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw