சம்மர் டூர்: இலங்கை பறந்த திவ்யபாரதி..!

published 9 months ago

சம்மர் டூர்: இலங்கை பறந்த திவ்யபாரதி..!

நடிகை திவ்யபாரதி இலங்கையில் டூர் சென்ற போது எடுத்த தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் ஹீரோவாக  நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் திவ்யபாரதி. இந்த படத்திம் மூலம் இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தின் வெற்றியை அடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவுக்கு ஜோடியாக 'மதில் மேல் காதல்', இயக்குனர் சேரன் இயக்கும் வெப் சீரிஸ், நடிகர் கதிருக்கு ஜோடியாக இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  

படங்களில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோ ஷூட் பக்கமும் கவனத்தை செலுத்தி வருகிறார்.  இந்த நிலையில்  தற்போது  கோடை காலத்தை என்ஜாய் செய்ய திவ்யபாரதி தனது தோழியுடன் இலங்கைக்கு பறந்துள்ளார்.

அங்கு இயற்கை சூழல் நிறைந்த பகுதி மற்றும் ஹோட்டலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இதற்கு லைக்ஸ்களை வித்து வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe