நீண்ட நாட்கள் கழித்து கோவை மாநகரில் பெய்த மழை...

published 9 months ago

நீண்ட நாட்கள் கழித்து கோவை மாநகரில் பெய்த மழை...

கோவை; கோவையில் பல்வேறு இடங்களில்  பெய்த மழையால் மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவியதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை தொடங்கியுள்ளது.இந்நலையில் கோவையில் இன்று  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மாலை நான்கு மணி முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்,சிறிது நேரத்தில் நகரின் சில இடங்களில் மிதமான மழை பொழிய துவங்கியது. 

அதன் படி,கோவை பீளமேடு, மசக்காளி பாளையம் போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில்  லேசான மழை பொழிந்தது..அதே போல,சிங்காநல்லூர் பகுதியில் மிதமான மழை,காந்திபுரம், 100 அடி ரோடு ,உக்கடம்,குணியமுத்தூர், காந்திபுரம், டவுன்ஹால், உள்ளிட்ட மாநகர  பகுதிகளில் திடீரென  மழை பெய்தது.இதனால் மாநகரம் முழுவதும் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.திடீரென  பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்...

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe