கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் பறிமுதல்...

published 9 months ago

கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் பறிமுதல்...

கோவை: போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், அறிவுறித்தலின் படி  கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக  ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் நிலைய காவல்துறையினர் காபி கடை சந்திப்பு அருகே சென்று சோதனை மேற்கொண்டு போது கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்திருந்த உத்திரபிரதேசம் மாநிலத்தை மோகன் (50)-யை கைது செய்தனர். அவரிடம் இருந்து  2கிலோ  கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு அவரை  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2024 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட  சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 115 நபர்கள் மீது 82 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 101.28 கிலோகிராம் எடையுள்ள  கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடலாம் எனவும் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe