2வது மனைவிக்கு வரதட்சணை கொடுமை: போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு...

published 9 months ago

2வது மனைவிக்கு வரதட்சணை கொடுமை: போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு...

கோவை: கோவை அருகேயுள்ள கோவைப்புதூர் 4வது பட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருபவர் தினேஷ்குமார் (29). இவருக்கும், போத்தனூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணிற்கும் கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. திருமண வெப்சைட் மூலமாக வரன் தேடி இந்த திருமணம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், தினேஷ்குமார் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து அதை மறைத்து 2வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணத்தின் போது வரதட்சணையாக 60 பவுன் நகை வழங்கப்பட்டது. மேலும் 20 பவுன் நகை கேட்டு அவர் மனைவியை கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் தினேஷ்குமார் மீது பெண்கள் வன் கொடுமை சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தினேஷ்குமாரின் உறவினர் வசுமதி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் இருகூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் தனது கணவர் ஆனந்தகுமார் (34) என்பவர் லோடு மேனாக வேலை செய்து வருவதாகவும் ஒரு பெண்ணுடன் பழகி வருவதாகவும், அதை கேட்டதால் தன்னை தாக்கி துன்புறுத்தியதாகவும் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe