கோவையில் சிறை கைதி மரணம்...

published 3 months ago

கோவையில் சிறை கைதி மரணம்...

கோவை: கோவை ரத்தினபுரி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பிரபு(42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை மிரட்டல் வழக்கில் ரத்தினபுரி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், நேற்று சிறையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 

ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe