கோவைக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள பெலிக்கான் உள்ளிட்ட பறவைகளை காண குவிந்த பறவை ஆர்வலர்கள்...

published 9 months ago

கோவைக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள பெலிக்கான் உள்ளிட்ட பறவைகளை காண குவிந்த பறவை ஆர்வலர்கள்...

கோவை: வருடத்தில் கோடை காலம் முடிந்து கோடை மழை துவங்கும் நேரத்தில் காலமாற்றம் காரணமாக பல்வேறு பறவைகள் இடம்பெயர்ந்து செல்லும்.  குறிப்பாக மிதமான வெப்பநிலை இருக்ககூடிய இடங்களுக்கு அதிகமான பறவைகள் இடம்பெயரும். தற்போது கோவை, நீலகிரி பகுதிகளில் மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பெலிக்கான் பறவைகள் அதிகமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கோவை வாலாங்குளத்தில்  பெலிகான் பறவைகள் இடம் பெயர்ந்து வந்துள்ளன. இதனை காண்பதற்கு பல்வேறு பறவை ஆர்வலர்கள் குவிந்துள்ளனர். பலரும் கேமராக்களில் புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர். மேலும் புகைப்பட கலைஞர்களும் அதிநவீன கேமராக்களை கொண்டு அப்பறவைகளை புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

மேலும் அவ்வழியாக நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெலிக்கான் பறவைகளை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

மேலும் இங்கு உள்நாட்டு பறவைகளான நாரை, கொக்கு உள்ளிட்டவைகளும் வந்துள்ளதால் பலரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe