ரத்தினபுரியில் வீடு புகுந்து கொள்ளை! மக்கள் அச்சம்!

published 9 months ago

ரத்தினபுரியில் வீடு புகுந்து கொள்ளை! மக்கள் அச்சம்!

கோவை: கோவையில் வீட்டு கதவை உடைத்து ரூ. 24 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி தில்லைநகர் நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி சென்னம்மாள்(35). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 24 ஆயிரம் காணவில்லை.

மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சென்னம்மாள் இது குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் பதிவாகி இருந்த ஒரு கைரேகையை கைப்பற்றினர்.

மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் ரத்தினபுரி சுற்றுவட்டார பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe